பயணித்த பாதையில் திரும்பி பார்க்கும் போதெல்லாம்

நான் இழந்ததை உணர்கிறேன்
இழப்பதும் பெறுவதும் ஆக வாழ்க்கை கணக்கேட்டில்
எழுதப்படுவதை காண்கிறேன்
 
கணக்குகள் எப்பொழுதும் சமனப்படுவதில்லை   
இழந்ததை காட்டில் பெற்றது பல சமயம் இனிக்கவே செய்கிறது
ஒன்றை இழந்தாலே மற்றொன்று என்ற வலியுறுத்தல் வலிக்கவே செய்கிறது
 
வேண்டா கணக்கு வழக்கை    ஒதுக்கி பெற்றதில் பேருவகை கொள்கையில்
சலனமில்ல சந்தோஷத்தில் திளைக்கிறது  என் மனம்